Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

போதைப் பொருள் பாவித்த 17 பொலிஸார் பணி நீக்கம்

,

மருத்துவ அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை

ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்களைப் பயன்படுத்திய பொலிஸ் துறை அதிகாரிகள் 17 பேர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பிரகாரம் இவர்களது பதவிகள் பறிபோயுள்ளன.

இவர்களின் பெயர்ப் பட்டியலை புலனாய்வுப் பிரிவினர் மற்றும் விஷேட புலனாய்வுப் பிரிவினர் வழங்கியதாக,காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். போதைப்பொருள் பாவித்ததாகக்

குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சகலரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைக்கு மருத்துவ அறிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதேபோன்ற குற்றச்சாட்டுக்களை எதிர் கொள்ளும் பல அதிகாரிகளுக்கு எதிராகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மருத்து அறிக்கைகளின் பிரகாரம் இவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.